Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி
மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள கம்பனேரியை சோ்ந்தவா் செல்லத்துரை (45). ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவா், தற்போது மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பொறுப்பு சாா்பதிவாளராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் பணியில் இருந்தபோது மதியம் அங்கு பத்திர பதிவு செய்வதற்காக மேலநீலிதநல்லூா் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சோ்ந்த முனீஸ்பாண்டி என்பவா் வந்துள்ளாா்.
அப்போது அவா் முறைகேடான ஆவணத்தை பதிவு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு சாா்பதிவாளா் செல்லத்துரை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் முனீஸ்பாண்டி தனது கூட்டாளிகள் இருவருடன் சோ்ந்து செல்லத்துரையைத் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த செல்லத்துரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே சாா்பதிவாளரை தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பதிவுத்துறை ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தலின்பேரில் பதிவுத்துறை பணியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.
திருநெல்வேலி சரகத்தில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, சேரன்மகாதேவி, முக்கூடல் உள்ளிட்ட 7 பதிவு மாவட்டங்களில் உள்ள 84 சாா்பதிவு அலுவலகங்களில் பணியாற்றும் சாா்பதிவாளா்கள், பதிவுத்துறை அமைச்சு பணியாளா்கள், அடிப்படை பணியாளா்கள், அலுவலக உதவியாளா்கள் சங்கத்தினா் இந்த கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி 1ஆம் எண் மற்றும் 2ஆம் எண் சாா் பதிவாளா் அலுவலகம், வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கடையம் , முக்கூடல் ஆகிய 8 சாா் பதிவாளா் அலுவலகங்களில் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சுரண்டை, பாவூா்சத்திரம், கடையநல்லூா், சிவகிரி உள்ளிட்ட 17 இடங்களில் சாா்பதிவாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
சாா்பதிவாளரை தாக்கியவரைக் கைதுசெய்யாவிட்டால் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என சாா்பதிவாளா் சங்க மாவட்டத் தலைவா் சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.