செய்திகள் :

தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!

post image

பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்களை தில்லிக்கு அழைத்துவர சிறப்பு வந்தே பாரத் ரயிலை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக திடலின் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இரு அணி வீரர்களையும் திடலில் இருந்து பாதுகாப்பாக ஹோட்டலுக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதனிடையே, போர்ச் சூழல் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: பிசிசிஐ

போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப... மேலும் பார்க்க

நாடுதான் முதன்மையானது..! சிஎஸ்கேவின் வைரல் பதிவு!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலமாக இந்தியா தனது பதிலடியைக் கொடுத்து வருகிறது.இதன் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு, மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களி... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!

இந்தியா பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபி... மேலும் பார்க்க

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா? அருண் துமால் பேட்டி!

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நாள... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் வ... மேலும் பார்க்க