செய்திகள் :

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா? அருண் துமால் பேட்டி!

post image

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன.

இதையும் படிக்க: ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!

இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்தியா இடைமறித்து தாக்கி அழித்து பதிலடி கொடுத்து வருகிறது.

எல்லையோர மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், தர்மசாலாவில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திடலில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி ரசிகர்கள் திடலை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து ஐபிஎல் தொடர் நடைபெறுமா?

பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நாளை ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்பது குறித்தும், தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்தும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது உள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அரசிடமிருந்து எந்த ஒரு வழிகாட்டுதலும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் வ... மேலும் பார்க்க

அதிக விக்கெட்டுகள்: முதலிடத்தில் இருக்கும் பிரசித் கிருஷ்ணாவை சமன்செய்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே வீரர் நூர் அகமது அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் பிரசித் கிருஷ்ணாவை சமன்செய்துள்ளார்.கொல்கத்தாவில் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் வித்த... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ்: ஹாரி புரூக்கிற்குப் பதிலாக ஆப்கன் வீரர்!

தில்லி கேபிடல்ஸ் அணியில் ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரர் ஒப்பந்தமானார்.இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி புரூக் தில்லி கேபிடல்ஸ் அணியில் ஏலத்தில் தேர்வானார். பின்னர் ஐபிஎல் தொடங்கும் முன்பு தான் தொடரிலிருந்து... மேலும் பார்க்க

ராஜஸ்தான் அணியில் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர்! சந்தீப் சர்மா விலகல்!

ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் அணியில் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்தத் தொடரில் முன்னாள் சாம... மேலும் பார்க்க

சென்னைக்கு வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டு... மேலும் பார்க்க