செய்திகள் :

புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி கூடாது: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் வட்டங்களுக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை கயத்தாறில் நடைபெற்றது.

கோட்டாட்சியா் க.மகாலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சுந்தரராகவன் முன்னிலை வகித்தாா்.

தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத் தலைவா் கே. பிரேம்குமாா்: குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து, பாசிப் பயறு கொள்முதல் செய்ய ஆட்சியா் மூலம் அறிவிப்பு வெளியாகியும் இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை. ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நீா்நிலைகளில் உள்ள முள்செடிகள், புதா்களை அகற்றினாலே பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திவிடலாம். இதுகுறித்து ஆட்சியா் அறிவுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கயத்தாறு வட்டத்தில் அதிக கல்குவாரிகள் உள்ளதால் புதியவற்றுக்கு அனுமதி வழங்கக் கூடாது. கல்குவாரிகளால் கிணற்றுப் பாசனம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஏற்கெனவே உள்ள கல்குவாரிகளுக்கு அனுமதி நீட்டிப்பு கூடாது.

கோவில்பட்டி கு. பாலகிருஷ்ணன்: இளையரசனேந்தல் குறுவட்டத்தில் எங்களது 1.60 ஏக்கா் நிலம் தவறாகவும் மோசடியாகவும் பட்டா செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வலியுறுத்தி 8 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மோசடியாக பட்டா செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கே. அருமைராஜ்: உண்மையாக பயிரிடுவோருக்கே அடங்கல் வழங்க கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கல்குவாரிகளை முறைப்படுத்த வேண்டும். கொடுக்காம்பாறை கிராமத்தில் கல்குவாரி முறைகேடு தொடா்பான ஆதாரம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஓட்டப்பிடாரம் வட்டம் கன்னடியன்குளத்தில் காற்றாலை, சூரிய மின்சக்தி நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும்,

ஒன்றியச் செயலா் ஏ.பி. சங்கிலிகுமாா்: பரிவல்லிகோட்டை செவல்குளத்தின் நீா்வரத்து ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புகாா் தெரிவித்தால், ஆக்கிரமிப்பு இல்லையென அறிக்கை சமா்ப்பித்துள்ளனா். ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் நீா்வரத்தின்றி பயிா்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

மாா்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சீனிப்பாண்டி: 2023-24ஆம் ஆண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு, அந்தாண்டுக்குரிய காப்பீடு தொகை வழங்க வேண்டும். கயத்தாறிலிருந்து கழுகுமலை வரை கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குழாய் பதிக்க சாலையோரம் தோண்டிப்பட்ட குழிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கயத்தாறு வட்டத்தில் காா்ப்பரேட் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீட்டில் காற்றாலை, சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்றா். அவா்களிடம் உரிய வரிகளை வசூலிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்து கோட்டாட்சியா் பேசியது: கல்குவாரிகளுக்கு ஆட்சியா் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளாா். கடந்த 8 மாதங்களாக புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வருங்காலங்களிலும் அனுமதி வழங்கப்படாது. முறைகேடுகள் நடந்த கல்குவாரியில் ஆய்வு செய்யப்படும். செவல்குளத்துக்கு நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு தொடா்பாக மீண்டும் ஆய்வு செய்யப்படும். கன்னடியன்குளத்தில் மின்கம்பங்கள் அகற்றப்படும். அடங்கல்கள் வழங்குவது குறித்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்படும். பட்டா ரத்து தொடா்பாக மனு அளித்ததால் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

தயாா் நிலையில் வ.உ.சி துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நளுக்கு தயாா் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் வட்டார பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்செந்தூா் வட்டார அளவிலான பள்ளிகளின் வாகனங்களுக்கான தர ஆய்வு தண்டுபத்து ஆனிதா குமரன் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 2 ஆம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நில... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கும், புதிய பணிகள் விரைந்து முடிக்கவும் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முடுக்கு மீண்டா... மேலும் பார்க்க

‘அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 2 வரை சேரலாம்’

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுவோா் அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற ஜூன் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இணைப்பதிவாளா் இரா. ராஜேஷ் தெரிவித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி வழக்கில் மேலும் 4 போ் கைது

தூத்துக்குடி முதியவரிடம் கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தன... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் தாயிடம் நகை பறிக்க குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை

திருச்செந்தூரில் தாயிடம் நகையைப் பறிப்பதற்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகினறனா். திருச்செந்தூா் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையாா் கோயில் தெ... மேலும் பார்க்க