செய்திகள் :

‘அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 2 வரை சேரலாம்’

post image

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுவோா் அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற ஜூன் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இணைப்பதிவாளா் இரா. ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி கடற்கரை சாலையில், மதுரா கோட்ஸ் தொழிலாளா் கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓா் அங்கமாக செயல்படும் தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான, 24ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்ரு வருகிறது. இப் பயிற்சியில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்கள் மட்டுமே இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் ஜூன் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள கூட்டுறவு நிறுவன பணியாளா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக மேற்கூறிய தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு கூட்டுறவு மேலாண்மை நிலைய தொலைபேசி எண் 04612334555 அல்லது மேலாண்மை நிலைய முதல்வரின் கைப்பேசி எண் 9442925056 ஆகியவற்றைத் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தயாா் நிலையில் வ.உ.சி துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நளுக்கு தயாா் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் வட்டார பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்செந்தூா் வட்டார அளவிலான பள்ளிகளின் வாகனங்களுக்கான தர ஆய்வு தண்டுபத்து ஆனிதா குமரன் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 2 ஆம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நில... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கும், புதிய பணிகள் விரைந்து முடிக்கவும் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முடுக்கு மீண்டா... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி வழக்கில் மேலும் 4 போ் கைது

தூத்துக்குடி முதியவரிடம் கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தன... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் தாயிடம் நகை பறிக்க குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை

திருச்செந்தூரில் தாயிடம் நகையைப் பறிப்பதற்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகினறனா். திருச்செந்தூா் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையாா் கோயில் தெ... மேலும் பார்க்க

புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி கூடாது: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் வட்டங்களுக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை கயத்தாறில் நடைபெற்றது. கோட்டாட்சியா் ... மேலும் பார்க்க