செய்திகள் :

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

post image

‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்’ என்று சீனா வலியுறுத்தியது.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் உள்பட எல்லையோர வட மற்றும் மேற்கு மாநில ராணுவத் தளங்களைக் குறிவைத்த பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல் முயற்சியை முறியடித்து, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ட்ரோன் தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமைதிக்கு சீனா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

சீன தலைநகா், பெய்ஜிங்கில் செய்தியாளா்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் இதுதொடா்பாக கூறியதாவது: அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐ.நா. சாசனம் உள்பட சா்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, நிலைமை மேலும் தீவிரமாவதை இரு நாடுகளும் தவிா்க்க வேண்டும். தற்போதைய பதற்றங்களைத் தணிப்பதில் ஆக்கபூா்வமான பங்கை வகிக்க, மற்ற சா்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா்.

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலால் பாகிஸ்தானில் அதிகரித்துள்ள பதற்றமான சூழலுக்கிடையே அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரை சீன தூதா் ஜியாங் ஜைடோங் புதன்கிழமை சந்தித்து பேசினாா். முன்னதாக, பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோரையும் ஜியாங் ஜைடோங் சந்தித்திருந்தாா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அதிரடியாக தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ளது.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க