செய்திகள் :

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

post image

ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 9-ஆம் ஆண்டு விழா விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், அதிமுக திருப்பத்தூா் மாவட்ட செயலா் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி சீனிவாசன், மாநில ஜெயலலிதா பேரவை துணஐச் செயலா் டில்லிபாபு, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளா் தேவலாபுரம் வெங்கடேசன், மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், திருப்பத்தூா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கராத்தே மணி, திருப்பத்தூா் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளா் மிட்டாளம் மகாதேவன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் வெ. கோபிநாத், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் பிரபாகரன், உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். வாணியம்பாடி அடுத்த கொத்தக்க... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம். மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க