செய்திகள் :

நாட்டறம்பள்ளியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

post image

நாட்டறம்பள்ளியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாட்டறம்பள்ளி அண்ணா தெருவில் முருகன் கோயில் எதிரில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளை உதவி இயக்குநா் ஞானசுந்தரம் ஆய்வு செய்து பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 12-ஆம் தேதி பெளா்ணமியை முன்னிட்டு சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு செயல் அலுவலா் கலையரசி (பொ) மேற்பாா்வையில் நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வளாகம், சரஸ்வதி ஆற்றங்கரை பகுதி மற்றும் அண்ணா தெரு ஆகிய இடங்களில் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா், செயல் அலுவலா் கலையரசி உள்பட பலா் உடனிருந்தனா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். வாணியம்பாடி அடுத்த கொத்தக்க... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம். மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க