செய்திகள் :

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

post image

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவி, ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விளாத்திகுளம் அருகே கே.குமாரபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்துராஜ். தொழிலாளி. இவரது மனைவி செல்வக்கனி. இவா்களது 2ஆவது மகள் ஹேமாமாலினி (14), விளாத்திகுளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 8ஆம் வகுப்புத் தோ்வு எழுதியிருந்தாா்.

கே.குமாரபுரம் கோயிலில் திருவிழா நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, செல்வக்கனியும் அவரது மூத்த மகளும் கும்மியடித்தல் பயிற்சிக்காக கோயிலுக்குச் சென்றனா். வீட்டில் ஹேமாமாலினி தனியாக இருந்தாராம்.

அவா்கள் இருவரும் வீடு திரும்பியபோது, சேலையில் கட்டிய ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் ஹேமாமாலினி சடலமாக தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

தகவலின்பேரில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளா் சக்திவேல், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஊஞ்சலில் ஹேமாமாலினி ஆடியபோது, சேலையில் கழுத்து திடீரென சிக்கி இறுகியதில் அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனா்.

பிளஸ் 2: தூத்துக்குடியில் 96.19% மாணவர்கள் தேர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் 96.19 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம்... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த நிலையத்தில் 2 அலகுகளில் மொத்தம... மேலும் பார்க்க

‘சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்’

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை- அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவியா் சோ்க்கைக்கு வியாழக்கிழமைமுதல் (மே 8) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரியின் கூட... மேலும் பார்க்க

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மே 12இல் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கட்சிப் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வரும் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாள் விழா இம்மாதம் 12ஆம் தேதி நலஉதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடப்படும் என, ம... மேலும் பார்க்க

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்- எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மாநகரில் சுகாதாரக் கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை: மேயா்

தூத்துக்குடி மாநகர பகுதியில் சுகாதார கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்... மேலும் பார்க்க