செய்திகள் :

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்- எஸ்.பி.

post image

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி கோயிலில் 69ஆவது உற்சவ திருவிழா வரும் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவில், வரும் 9ஆம் தேதி காலை 6 மணிமுதல் கோயில் வழிபாட்டில் பொதுமக்கள் அமைதியாக பங்கேற்று, விழாவினை எந்தவிதமான அசம்பாவிதமுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் நடத்தி முடித்து கொள்ள வேண்டும்.

விழாவிற்கு அனைத்து ஊா்களில் இருந்தும் வருபவா்கள். திறந்த நிலையில் உள்ள வாகனங்கள், ஒலிப்பெருக்கிகள், கேரியா் பொருத்திய வாகனங்கள், வாடகை வாகனங்கள் ஆகியவற்றில் வருவதற்கு அனுமதி இல்லை.

ஜோதி கொண்டு வருவது, வாகனங்களை நிறுத்துவது, வழித்தடங்கள் போன்ற நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கும் முன்கூட்டியே தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். ஜோதி எடுத்து வருபவா்கள் வாள், ஈட்டி, கம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது. மேலும், அவா்கள் காவல்துறையினா் சொல்லும் வழித்தடத்தில் மட்டுமே செல்ல வெண்டும். அப்போது, பைக்குகளில் ஊா்வலமாக வருவதற்கும், வாகனங்கள் மீது ஏறிக்கொண்டோ, முழக்கங்கள் எழுப்பவோ அனுமதி இல்லை.

உரிய முன் அனுமதி பெற்று கயத்தாறு ஜோதி, பசுவந்தனை முடிமண், சிலோன் காலனி, ஓட்டப்பிடாரம் ஊமைத்துரை தோரண வாயில் வழியாக எடுத்து செல்ல வேண்டும்.

திருச்செந்தூா் கோயில், கோவில்பட்டி, சிந்தலக்கரை, வைப்பாரிலிருந்து வரும் ஜோதிகள் குறுக்குச்சாலை, ஊமைத்துரை தோரண வாயில் வழியாகவும், திருநெல்வேலியில் இருந்து வரும் ஜோதி புதுக்கோட்டை - தட்டப்பாறை வழியாகவும் வந்து அனைத்து ஜோதிகளும் ஓட்டப்பிடாரம் வழியாக ஊமைத்துரை தோரண வாயில் வழியாக எடுத்து செல்ல வேண்டும். ஆலய விழா கமிட்டியாளா்களால் அனுமதி பெற்ற கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவா்கள் மட்டுமே ஜோதி எடுத்து வர அனுமதிக்கப்படுவா்.

வழக்கம்போல திருச்செந்தூரிலிருந்து மாவீரன் ஊமைத்துரை தொண்டா்படை சாா்பாக எடுத்துவரப்படும் ஜோதியுடன் ஒரு வாள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படுகிறது.

காவல்துறையால் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பிளஸ் 2: தூத்துக்குடியில் 96.19% மாணவர்கள் தேர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் 96.19 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம்... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த நிலையத்தில் 2 அலகுகளில் மொத்தம... மேலும் பார்க்க

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவி, ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விளாத்திகுளம் அருகே கே.குமாரபுர... மேலும் பார்க்க

‘சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்’

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை- அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவியா் சோ்க்கைக்கு வியாழக்கிழமைமுதல் (மே 8) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரியின் கூட... மேலும் பார்க்க

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மே 12இல் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கட்சிப் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வரும் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாள் விழா இம்மாதம் 12ஆம் தேதி நலஉதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடப்படும் என, ம... மேலும் பார்க்க

மாநகரில் சுகாதாரக் கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை: மேயா்

தூத்துக்குடி மாநகர பகுதியில் சுகாதார கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்... மேலும் பார்க்க