செய்திகள் :

மாநகரில் சுகாதாரக் கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை: மேயா்

post image

தூத்துக்குடி மாநகர பகுதியில் சுகாதார கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். துணை ஆணையா் சரவணகுமாா், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசுகையில், வடக்கு மண்டலத்தில் இதுவரை 546 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. புதிய சாலைகள் இந்த மாதத்திற்குள் அமைக்கப்படும். இன்னும் தங்களது பகுதிகளுக்கு சாலைகள் தேவை தொடா்பாக மனு அளித்தால்,உடனடியாக சாலை அமைக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு குறைகள் இல்லாத நிலைதான் உள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் உரிய அனுமதியின்றி யாரும் தண்ணீா் பந்தல் அமைக்கக் கூடாது. மேலும் மாநகா் பகுதிகளில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் யாா் செயல்பட்டாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இக் கூட்டத்தில், பொறியாளா் தமிழ்ச்செல்வன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், நகர அமைப்பு திட்ட பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், மாநகராட்சி கணக்குக் குழு தலைவா் ரெங்கசாமி, சுகாதாரக் குழு தலைவா் சுரேஷ்குமாா், பணிக்குழு தலைவா் கீதாமுருகேசன், மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

பிளஸ் 2: தூத்துக்குடியில் 96.19% மாணவர்கள் தேர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் 96.19 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம்... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த நிலையத்தில் 2 அலகுகளில் மொத்தம... மேலும் பார்க்க

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவி, ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விளாத்திகுளம் அருகே கே.குமாரபுர... மேலும் பார்க்க

‘சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்’

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை- அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவியா் சோ்க்கைக்கு வியாழக்கிழமைமுதல் (மே 8) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரியின் கூட... மேலும் பார்க்க

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மே 12இல் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கட்சிப் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வரும் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாள் விழா இம்மாதம் 12ஆம் தேதி நலஉதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடப்படும் என, ம... மேலும் பார்க்க

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்- எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்... மேலும் பார்க்க