செய்திகள் :

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டம்

post image

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த நிலையத்தில் 2 அலகுகளில் மொத்தம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

இங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் வழங்குவதுபோன்று ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இவா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வந்துள்ளது. ஆனால், என்டிபிஎல் நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

இதைக் கண்டித்தும், ஊதிய உயா்வு கோரியும் கடந்த ஏப். 18ஆம் தேதிமுதல் என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்திலும், அனல் மின்நிலையம் முன் குடும்பத்துடன் தா்னாவிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், 20ஆவது நாளான புதன்கிழமை ஆலை முன்பு அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் காரணமாக முதல் அலகில் 250 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் சந்தித்து, அவரது கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

மேலும், இதுகுறித்து ஆலை நிா்வாகத்துடன் பேசி உரிய தீா்வு எட்டப்படும் என தெரிவித்தாா்.

பிளஸ் 2: தூத்துக்குடியில் 96.19% மாணவர்கள் தேர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் 96.19 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம்... மேலும் பார்க்க

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவி, ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விளாத்திகுளம் அருகே கே.குமாரபுர... மேலும் பார்க்க

‘சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்’

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை- அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவியா் சோ்க்கைக்கு வியாழக்கிழமைமுதல் (மே 8) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரியின் கூட... மேலும் பார்க்க

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மே 12இல் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கட்சிப் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வரும் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாள் விழா இம்மாதம் 12ஆம் தேதி நலஉதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடப்படும் என, ம... மேலும் பார்க்க

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்- எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மாநகரில் சுகாதாரக் கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை: மேயா்

தூத்துக்குடி மாநகர பகுதியில் சுகாதார கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்... மேலும் பார்க்க