3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில்.. பயணிகளுக்கு வேண்டுகோள்!
3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடித் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் பாகிஸ்தானின் விமானப் படையைச் சேர்ந்த 3 விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மூன்று மணிநேரத்துக்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்களில் உள்ள அனைத்து பயணிகளும் சோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள்ளாக பார்வையாளர்கள், உறவினர்கள் நுழைவது தடைவிதிக்கப்பட்டு என்றும் கூடுதலாக 7 கிலோ வரையிலான கைப்பை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க: போர்ப் பதற்றம்: இருளில் மூழ்கியது ஜம்மு - காஷ்மீர்!