செய்திகள் :

சேகர் ரெட்டியின் உறவினர்... போட்டுக்கொடுத்த விஐபி... ED ரேடாரில் சிக்கிய வேலூர் ஹோட்டல் அதிபர்!

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் மேத்தாகிரி ரெட்டி என்கிற மேத்தா கிரிதரன்.

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினரான மேத்தாகிரி `சாய் சுப்ரபாதம்’ என்கிற சைவ ஹோட்டல்களின் அதிபராகவும் இருக்கிறார்.

வேலூரில் சி.எம்.சி மருத்துவமனை அவுட் கேட் அருகிலும், வாணியம்பாடி அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலும் இவரின் ஹோட்டல்கள் அமைந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு, வேலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறத்திலும் சாய் சுப்ரபாதம் கஃபே ஷாப்பையும் திறந்திருக்கிறார் மேத்தாகிரி.

அதுமட்டுமல்லாமல், `வேலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கம்’ என்கிற சங்கத்திலும் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக மேத்தாகிரி இருந்துவருகிறார்.

மேத்தாகிரி ரெட்டி
மேத்தாகிரி ரெட்டி

சேகர்ரெட்டியின் உறவினர், ஊர்க்காரர் எனக் காட்டிக்கொள்ளும் மேத்தாகிரி அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டினாலும், தி.மு.க அனுதாபியாகவே தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார்.

இந்நிலையில்தான் அமலாக்கத்துறையின் ரேடாரில் சிக்கியிருக்கிறார் மேத்தாகிரி. அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் நேற்று (மே 6) விடியற்காலை தொண்டான்துளசி கிராமத்திலிருக்கும் மேத்தாகிரியின் வீட்டுக்குச் சென்றனர்.

காலை 6.30 மணிக்கு வீட்டுக்குள் சென்று சோதனையைத் தொடங்கிய அமலாக்கத்துறையினர், மேத்தாகிரி பயன்படுத்தும் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் ஆய்வுசெய்தனர்.

பணப்பரிவர்த்தனை டீலிங் தொடர்பாக அமலாக்கத்துறையினருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன.

சொத்துகள், நகைகள், அவை வாங்கப்பட்ட விபரங்களையும் அலசியிருக்கின்றனர். சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்தச் சோதனை மாலை 5 மணியளவில் நிறைவுற்றது.

வருவாய்க் கணக்குத் தாக்கல் செய்யப்படாத சில ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி எடுத்துச்சென்றதாகவும் தெரியவருகிறது.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி

இந்தச் சோதனையின் பின்னணி குறித்துப் பேசுகிற வேலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சிலர், "வேலூரில் ஹோட்டல் பிசினஸில் கோலோச்சும் பிரபல வி.ஐ.பி ஒருவர்தான் அமலாக்கத்துறையினரிடம் தன்னைப் போட்டுக் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறது மேத்தாகிரி தரப்பு.

காரணம், அந்த வி.ஐ.பி-யும் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தச் சாதி சங்கத்தில் கௌரவத் தலைவராகவும் இருப்பவர்.

மேத்தாகிரியின் வளர்ச்சியை விரும்பாத அந்த வி.ஐ.பி தொடர்ச்சியான நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

அந்த வி.ஐ.பி குழுமத்துக்குச் சொந்தமான ஹோட்டல்கள் மட்டுமே வேலூரை ஆக்கிரமித்திருக்கின்றன. மற்றவர்களின் வளர்ச்சியை அவர் எப்போதுமே விரும்புவதில்லை. போட்டியாளர்களை வீழ்த்த அவர் எந்த எல்லைக்கும் சென்று குடைச்சல் கொடுப்பார்’’ என்கின்றனர் புலம்பியவாறு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு

தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் ... மேலும் பார்க்க

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்த... மேலும் பார்க்க

Operation Sindoor: `இந்திய ராணுவ நடவடிக்கையை வரவேற்கிறேன்; அதேசமயம் இது..."- திருமாவளவன் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்க... மேலும் பார்க்க

`போர் வேண்டாம்; பாகிஸ்தான் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்... பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட்... மேலும் பார்க்க