செய்திகள் :

மும்பை 'வேவ்ஸ் 2025' மாநாட்டில் நடப்பது என்ன? - விவரிக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

post image

வேவ்ஸ் உச்சி மாநாடு 2025 ( World Audio Visual and Entertainment Summit) என்று சொல்லப்படும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, நாளை 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான ஒலி-ஒளி தொடர்பாக பல்வேறு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய திரைபிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர். தொடக்க விழாவின் போது ரஜினிகாந்த், அமீர்கான், ரன்பீர் கபீர், தீபிகா படுகோனே, மோகன்லால், சிரஞ்சீவி, ஷாரூக்கான், கார்த்தி, ரவிமோகன், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜமௌலி , அக்‌ஷய் குமார் என இந்திய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்சினிமாவில் இருந்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்த்தில் இருந்து தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு உள்பட பலரும் பங்கேற்று வருகின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பேசினால், வியந்து விவரித்தார். |

தயாரிப்பாளர்கள்

'' திரைத்துறையினருக்கு இப்படி ஒரு மாநாடு பயனுள்ளது. சினிமா, டிஜிட்டல், மீடியா என பொழுது போக்கு துறையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பம், தொழிற்துறை வளர்ச்சிகள் குறித்து பல்வேறு அமர்வுகள், கலாந்தாய்வும் கூட்டங்கள் நடந்து வருகின்றன. நம்மூர் உணவு திருவிழா போல, இது தொழில்நுட்ப திருவிழானு சொல்லலாம். எடிட்டிங், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என பல்துறைகளிலும் புதுசுபுதுசா என்னென்ன விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் என பல தளங்களும் தங்களுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து ஸ்டால்களில் விளக்கினார்கள். தொழில்நுட்பம் குறித்தான ஸ்டால்கள் வைக்கப்பட்டிருந்தன.

கீரவாணியுடன் சித்ரா, ஷ்ரேயா கோஷல்..

சாட் ஜிபிடியை பயன்படுத்தி படத்திற்காக ஸ்கிரிப்ட்டை எழுதியதாக சில இயக்குநர்கள் தெரிவித்தார்கள். கதை சொல்லியாக ஏ.ஐ.தொழில்நுட்பம் விளங்கும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருந்தது. பாடகிகள் சித்ரா மேம், ஷ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் கீரவாணி சார் பலரையும் அங்கே பார்க்க முடிந்தது. கரீனாகபூர், விஜய் தேவரகொண்டா, கரண் ஜோகர் பங்கேற்ற பேனல் டிஸ்கஷன் போன்று, பல விவாத அமர்வுகள் இருந்தது. இந்திய சினிமாவின் மாற்றம் குறித்து ரவி மோகன், சோனாலி குல்கர்னி என பலரும் விவாதித்தார்கள். இப்படி பல அமர்வுகளை பார்த்தோம். தொழில்நுட்ப அப்டேட்களையும் நிறைய கற்றுக்கொண்டோம்.'' என்கிறார் சுரேஷ் காமாட்சி.

STR: "முதலில் ஒரு டைரக்டர் நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டும்" - சிம்பு ஓப்பன் டாக்

‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமலும் மணி ரத்னமும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் உள்நாட்டு சதி; பாகிஸ்தான் மேல பழியைப் போட்டு.. - காஷ்மீரிலிருந்து மன்சூர் அலிகான்

சுற்றுலா சென்ற 26 பேரை சுட்டு படுகொலை செய்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.குறிப்பிட்ட மதத்தினர் இந்தத் தாக்குதலில் டார்கெட் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த... மேலும் பார்க்க

STR 49: `கல்லூரி மாணவராக சிம்பு!' - பூஜையுடன் தொடங்கிய சிம்புவின் 49-வது படம்

சிம்புவின் 49-வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. சிம்புவுடன் கயாடு லோகர், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.இவர்களை தாண்டி படத்தில் சிம்புவுடன் சந்தானமும்... மேலும் பார்க்க

``நடிகராக இருக்கவே தகுதியற்றவர்" - யோகிபாபு குறித்து தயாரிப்பாளர் ராஜா விமர்சனம்

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'. போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்... மேலும் பார்க்க