மே தினத்தில் விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை
பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் தொழிலாளா் தினத்தன்று (மே 1) விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாள்கள் சட்டத்தின் கீழ், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையில், வா்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் உள்பட 57 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 17 கடைகள் மற்றும் 7 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 24 நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறியது கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி கூறியது:
மேற்கண்ட 24 நிறுவனங்களும், தொழிலாளா் தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல், தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.