செய்திகள் :

பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!

post image

பெங்களூரு: பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதல் குறித்து அமைச்சர் ஸமீர் அகமது கான் செய்தியாளர்களுடன் பேசுகையில், ”பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டால் அந்நாட்டுக்கு எதிராக சண்டையிடவும் தான் தயார் என்றும், தேவைப்பட்டால் உடலில் வெடிகுண்டுகளை அணிந்துகொண்டு அந்நாட்டில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, கடந்த 2018-ஆம் ஆண்டு காங்கிரஸில் ஐக்கியமானார் ஸமீர் அகமது கான். இந்தநிலையில், சாம்ராஜ்பேட் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் வீட்டுவசதி, வஃக்ப், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: ”நாம் இந்தியர்கள், ஹிந்துஸ்தானியர்கள்; அப்படியிருக்கையில், நமக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்புமில்லை. பாகிஸ்தான் நமக்கு எப்போதுமே எதிரிதான்.

நாட்டுக்கு தேவைப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் எனக்கு அனுமதியளித்தால், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தேவையான வெடிபொருள்களை தாருங்கள், அவற்றை அணிந்துகொண்டு பாகிஸ்தான் செல்ல தயார்.

நான் நகைப்புக்காக ஒன்றும் இப்படிப் பேசவில்லை. எனது உயிரை நாட்டுக்கா தியாகம் செய்யவும் தயார்” என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க

‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தரவு உறுதி

சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின்போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலா்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவா்களின் பணிநீக்க உத... மேலும் பார்க்க