செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாதிகள்: இலங்கை வந்த சென்னை விமானத்தில் சோதனை

post image

சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர், இலங்கைக்கு விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வந்த தகவலையடுத்து, இலங்கையின் பண்டாரநாயகே விமான நிலையத்தில், சென்னையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பயங்கரவாதிகளும் சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கை தப்பியிருக்கலாம் என்று இந்திய புலனாய்வுப் பிரிவு அளித்த தகவலையடுத்து சனிக்கிழமை, ஸ்ரீலங்கன் விமான நிலையத்தில் சிறப்புச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் இந்தியா தரப்பிலிருந்து, 6 பயங்கரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னையிலிருந்து வந்த விமானம், பண்டாரநாயகே விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தேடுதல் பணி நடத்தப்பட்டது.

சென்னையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல்122 எண் விமானம் சென்னையிலிருந்து இன்று முற்பகல் 11.59 மணிக்குப் புறப்பட்டு கொழும்பு சென்றதும், பாதுகாப்புப் படை அதிகாரிகளால் முழுவதுமாக சோதனையிடப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புச் சோதனையானது, இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் விமானத்தில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல்படி, உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த விமானம் அடுத்து சிங்கப்பூர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எப்படியிருந்தாலும், எங்களது பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிக மோகமான தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தோ்தல்: மீண்டும் பிரதமா் ஆகிறாா் ஆன்டனி ஆல்பனீஸ்

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறு... மேலும் பார்க்க

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க