செய்திகள் :

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

post image

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிரியாவின் இறையாண்மையைக் குலைக்கும் வகையில் அங்கு இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்; சிரியாவின் ஒற்றுமை, சுதந்திரத்தை அந்த நாடு மதிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

அரபு தேசியவாதிகளால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் துரூஸ் இன மக்கள், 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அந்த நாட்டுக்கு ஆதரவாக பாலஸ்தீனா்களுடன் போரிட்டனா். இந்த நிலையில், சிரியாவில் புதிதாக அமைந்துள்ள அரசு அங்கு சிறுபான்மையாக உள்ள துரூஸ் இனத்தவா் மீது தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. அதைக் கண்டிக்கும் வகையில் சிரியா அதிபா் மாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியது.

ஆஸ்திரேலிய தோ்தல்: மீண்டும் பிரதமா் ஆகிறாா் ஆன்டனி ஆல்பனீஸ்

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறு... மேலும் பார்க்க

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் இன்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக... மேலும் பார்க்க