செய்திகள் :

இந்தியா அணை கட்டினால் அழித்து விடுவோம்! பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

post image

சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அதில், சிந்து நதி நீர் பகிர்வு ரத்தும் அடங்கும். பாகிஸ்தானில் 80 சதவிகித விவசாய நிலங்களுக்கு சிந்து நதிதான் நீராதாரமாக இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் ஒரு துளி நீர்கூட பாகிஸ்தானுக்கு சென்றடையாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சிந்து நதிப் படுகையில் இந்தியா அணை ஏதேனும் கட்டினால், பாகிஸ்தான் என்ன செய்யும்? என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்த பதிலில், ``சிந்து நதிப் படுகையில் இந்தியா அணை கட்டினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பாக இருக்கும். எவ்வளவு பாதுகாப்பான கட்டடக்கலையாலும் இந்தியா அணை கட்ட முயற்சித்தாலும், பாகிஸ்தான் அதனை அழித்து விடும்’’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும்விதமாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரான கவாஜா, வெற்று அச்சுறுத்தல்களை மட்டுமே வெளியிடுகிறார்.

அவர் வெறுமனே ஒரு `அறிவிப்புத் துறை அமைச்சராக’ மட்டுமே உள்ளார்.

பாகிஸ்தானியர்களிடையே உள்ள அச்சம், அவர்களின் வெற்று அச்சுறுத்தல்கள் மூலம் தெரிகிறது. அவர்கள், இரவில் தங்கள் தூக்கத்தை இழந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க

‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தரவு உறுதி

சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின்போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலா்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவா்களின் பணிநீக்க உத... மேலும் பார்க்க

தகராறுகளுக்கு தீா்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்: குடியரசுத் தலைவா் முா்மு வலியுறுத்தல்

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீா்வு காணும் வழிமுறையை கிராமப்புறப் பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெ... மேலும் பார்க்க