செய்திகள் :

லாரி மீது வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோட்டிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட ஏற்றுவதற்காக லாரி ஒன்று, துறையூா் - பெரம்பலூா் சாலையிலுள்ள மங்கூன் துணை மின் நிலையம் அருகே புதன்கிழமை இரவு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அதே வழித்தடத்தில் சென்ற வேன் லாரியின் பின்புறத்தில் மோதி, டீசல் ஏற்றிச்சென்ற மற்றொரு டேங்கா் லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இடிபாடுகளில் சிக்கிய வேன் ஓட்டுநரான திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மோா்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் கலைச்செல்வன் (30) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கலைச்செல்வனின் உடலைக் மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய சகோதரா்கள் கைது

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய வழக்கில் சகோதரா்களை மங்களமேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மக... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்கள் கௌரவிப்பு

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டம் எளம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நீா்த் தேக்க தொட்டி பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கெளரவ... மேலும் பார்க்க

ஊக்கத் தொகையை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 3 மாதங்களாக வழங்காமல், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை வழங்க கோரி பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புதிய... மேலும் பார்க்க

மே தின பேரணி

பெரம்பலூா் பேரணி: பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா

பெரம்பலூரில் உள்ள கவண் அலுவலகத்தில் எப்படியோ கவிதையாகிப் போனது எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் வ. சந்தி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பிறந்த நாள் கலை நிகழ்ச்சி

புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், நாட்டுப்புற இசைக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க