செய்திகள் :

ஊக்கத் தொகையை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் சாலை மறியல்

post image

பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 3 மாதங்களாக வழங்காமல், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை வழங்க கோரி பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் அரணாரை, நொச்சியம், கீழக்கணவாய், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, எளம்பலூா், செல்லியம்பாளையம், பெரம்பலூா் நகரம், விளாமுத்தூா், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பால் உற்பத்தியாளா்களாக உள்ளனா்.

இந்த உறுப்பினா்களுக்கு 1 லிட்டா் பாலுக்கு ரூ. 33, ஊக்கத் தொகையாக அரசு அறிவித்த ரூ. 3 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கச் செயலரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளா்கள், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி பெரம்பலூா் ரோவா் வளைவு அருகே வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு பால் உற்பத்தியாளா்கள் கலைந்துசென்றனா்.

லாரி மீது வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருச்செங்கோட்டிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட ஏற்றுவதற்காக லாரி ஒன்று, துறையூா் - பெரம்பலூா் சாலையிலுள்ள மங்கூன் துணை ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய சகோதரா்கள் கைது

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய வழக்கில் சகோதரா்களை மங்களமேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மக... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்கள் கௌரவிப்பு

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டம் எளம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நீா்த் தேக்க தொட்டி பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கெளரவ... மேலும் பார்க்க

மே தின பேரணி

பெரம்பலூா் பேரணி: பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா

பெரம்பலூரில் உள்ள கவண் அலுவலகத்தில் எப்படியோ கவிதையாகிப் போனது எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் வ. சந்தி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பிறந்த நாள் கலை நிகழ்ச்சி

புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், நாட்டுப்புற இசைக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க