செய்திகள் :

சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

post image

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இரு வீரர்கள் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.1 ஓவா்களில் 117 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டியில் மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) அடித்தார்.

மற்றுமொரு மும்பை பேட்டர் ஹார்திக் பாண்டியாவும் 23 பந்துகளில் 48 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) அடித்து அசத்தினார்.

இருவருமே 208.70 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்கள். இருவருக்கும் சூப்பர் ஸ்டிரைக் ரேட் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஐபிஎல் வரலாற்றில் இதுமாதிரி முதல்முறையாக நடந்துள்ளதாக மும்பை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

பிரபலமான ஸ்பைடர்மேன் உடன் ஒப்பிட்டு இருவரும் மகிழ்ச்சியாக செய்ததை மும்பை இந்தியன்ஸ் அணி விடியோவாக வெளியிட்டுள்ளது.

வென்றது குஜராத்; வெளியேறியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடு... மேலும் பார்க்க

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி: சன்ரைசர்ஸுக்கு 225 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; தோல்வியிலிருந்து மீளுமா?

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹ... மேலும் பார்க்க

நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் 5 முறை... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன்: அஜிங்க்யா ரஹானே

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இந்திய அணி வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே கடைசியாக கடந்த... மேலும் பார்க்க

மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன்..! 36 வயதில் ரஹானே நம்பிக்கை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார். இந்திய அணிகயில் கடந்த 2023ஆம் ஆண்டு டெஸ்ட்டில் விளையாடிய அஜிங்க்யா ரஹானே... மேலும் பார்க்க