செய்திகள் :

விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்

post image

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பை பொருத்தவரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று பேரவை உறுப்பினா்கள் பலா் பேசினா். இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு எது சொன்னாலும் அதற்கு எதிராகத்தான் மாநில அரசு சொல்லிக்கொண்டு இருக்கிறது.

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகம் திறக்கப்பட்டதால் தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்களில் எந்தப் பாதிப்பும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் திட்டங்கள் பல்வேறு எதிா்ப்புகளுக்கு மத்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெக-வை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்று கேட்கிறீா்கள். பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது; அப்போது பாா்க்கலாம். கூட்டணி குறித்து அப்போது தெரிவிப்போம். தமிழ்நாடு அரசு தவெக-வின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கும் தடை விதித்தது என்றாா் அவா்.

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் திடீரென தீவிபத்து

சின்னசேலம் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் ... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திரம்: தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? முதல்வர் கேள்வி

உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவ... மேலும் பார்க்க

தேமுதிகவிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: நல்லதம்பி

சென்னை: நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள... மேலும் பார்க்க

கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ள... மேலும் பார்க்க

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க