இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
சின்னசேலத்தில் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் திடீரென தீவிபத்து
சின்னசேலம் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனி வைத்து நடத்தி வருபவர் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த ரவிசங்கர் மகன் மாணிக்கம்.
பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா
சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் திடீரென கீற்றுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் சாம்பிராணி, ஊதுபத்திகள் தீயில் கருகி கொட்டகை முழுவதும் சேதமடைந்தன.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த சின்னசேலம், நைனார்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை மூட்டம் காணப்பட்டது.