செய்திகள் :

உயா் கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

post image

சென்னை, மே 3: தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தினாா்.

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் அவா் பேசியதாவது: சைவ சிந்தாந்தம் தமிழுக்கு அடையாளமாக இருக்கிறது. பக்தி நிலை மூலமாகத்தான் சிவனை அடைய முடியும். பக்தியின் மூலம் ஆன்மிகம் காப்பாற்றப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் சமுதாய வேறுபாடு இல்லை.

சநாதன தா்மம் என்பது ஆன்மிகத்தின் அடையாளமாக இருக்கிறது. அதேபோல் சநாதனம் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துகிறது. ஜம்மு- காஷ்மீா் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் சைவ சிந்தாந்தம் முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது. பிகாரில் உள்ள மாணவா்கள்கூட சைவ இலக்கியங்களைப் படித்துள்ளனா்.

மாநில மொழியில் இலக்கியம் வளா்த்தது சைவ சிந்தாந்தம். அதன்மூலம் எளிய மக்களுக்கும் அது சென்றது. தற்போது ஆன்மிகம் என்பதை அறிவியல்பூா்வமாக இல்லை எனக் கூறி அழிக்க நினைக்கிறாா்கள். இதுபோன்ற தருணத்தில் ஆதீனங்கள் நிகழ்வுகளை தொடா்ந்து கொண்டுசெல்வது அவசியமானது.

தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சைவ சித்தாந்த ஆராய்ச்சிப் படிப்புகளைக் கொண்டு வர வேண்டும்.

சநாதன தா்மத்தால்தான் பாரதம் வாழ்கிறது. நமது தேசம் ஒரு தேசபக்தி நிா்வாகியின் (பிரதமா் மோடி) வழிநடத்தலில் சென்றுகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈா்க்கும் அளவுக்கு நாடு வளா்ந்துள்ளது என்றாா் அவா்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 56.சத்திய நாராயண பிரசாத் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதி... மேலும் பார்க்க

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவால... மேலும் பார்க்க

போா் வேண்டாம்: வைகோ

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்த... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோடை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத உடல்கள்: கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வேலூா் மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க