Maaman: "எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது" - லோகேஷ் க...
உரிமை கோரப்படாத உடல்கள்: கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
வேலூா் மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இறந்த 70 வயது முதியவா் ராஜாராமன் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக 3 சக்கர குப்பை வண்டியில் பொதுவெளியில் எடுத்து சென்றுள்ளனா்.
இது தொடா்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினா் கண்ணதாசன், இந்த வழக்கில் மரணத்திற்கு பிந்தைய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது மனித உரிமை மீறிய செயல் எனக்கூறி தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தாா்.
அதன்படி, உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதை உணா்வு பூா்வமான அணுக வேண்டும் எனக் கூறி, தமிழகம் முழுவதும் உரிமை கோரப்படாத இறந்தவா்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக தமிழக அரசு உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.