செய்திகள் :

ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி

post image

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் அறிமுகம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் அறிமுகமான ஆண்டு மிகவும் உற்சாகமாக இருந்தது. நிறைய எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. அப்போது நாங்கள் அதிகம் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஐபிஎல் ஏலம் நடைபெற்றபோது, நாங்கள் மலேசியாவில் இருந்தோம். நாங்கள் முதல் தர கிரிக்கெட்டர்கள் வரிசையில் ரூ.20 லட்சத்துக்கான ஏலத்தில் இடம்பெற்றோம். எங்களுக்கு 20 லட்சம் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தோம். மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அது இருந்தது. ஏனெனில், கோலாகலமான தொடக்க விழா, மிகப் பெரிய கிரிக்கெட் வீரர்களுடன் சந்திப்பு என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம்.

இதையும் படிக்க: நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

ஐபிஎல் பயணம் மிகவும் நீண்ட பயணமாக இருந்துள்ளது. நாங்கள் இளம் வீரர்களாக ஐபிஎல் தொடரில் இணைந்தோம். சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடினோம். இளம் வீரர்களாக அறிமுகமான நாங்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களாக வளர்ந்தோம்.

நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஐபிஎல் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த அளவுக்கு ஐபிஎல் வளர்ச்சியடையும் என ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் உற்சாகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள், நடத்தப்படும் விதம், அணிகளுக்கு இடையேயான கடும் போட்டி இந்த தொடரை மிகவும் விரும்பத்தக்கதாக மாற்றியுள்ளது என்றார்.

இதையும் படிக்க: 23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 443 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்! சென்னை போராடி தோல்வி!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட... மேலும் பார்க்க

ஷெப்பர்ட் அதிவேக அரைசதம்: சென்னை அணிக்கு 214 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான அட்டத்தில் ஷெப்பர்ட்டின் அதிவேக அரைசதத்தால் பெங்கரூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக... மேலும் பார்க்க

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மாறவிருக்கும் ஷுப்மன் கில்: ரஷித் கான்

இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக ஷுப்மன் கில் மாறப்போவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் ... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகி... மேலும் பார்க்க

சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!

ஐபிஎல் தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும... மேலும் பார்க்க