செய்திகள் :

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா!

post image

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க: நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19 விக்கெட்டுகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

வெற்றியின் ரகசியம் என்ன?

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பவர்பிளேவில் 5-வது அல்லது 6-வது ஓவரில் பந்துவீசுவது எனக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு. ஆனால், இந்த பொறுப்பு எனக்கு புதிதாக தெரியவில்லை. ஏனெனில், ஒருநாள் போட்டிகளில் இதனை நான் செய்துள்ளேன். நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெறவில்லையென்றால், அது சிறப்பானதாக இருக்காது.

இதையும் படிக்க: நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!

ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளதை நினைத்து தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை நான் தவறவிட்டேன். அதன் பின், மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைந்த பிறகு, நன்றாக பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். குஜராத் டைட்டன்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.

குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன். அணியில் உள்ள அனைவரும் அவர்களது சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார்கள். ஷுப்மன் கில் அணியை நன்றாக வழிநடத்துகிறார். அவருக்கு யாரிடம் எதனைக் கூற வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. அணியின் திட்டங்கள் என்னவென்று அவருக்குத் தெளிவாக தெரிகிறது. அவர் வீரர்களுடன் தொடர்ந்து பேசுகிறார். அவர் கொடுக்கும் ஆலோசனைகள் உண்மையில் மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் சிறப்பான கேப்டனாக மாறி வருகிறார்.

இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

ஆஷிஸ் நெஹ்ரா வீரர்களுக்கு மிகவும் உதவுகிறார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. ஆடுகளத்தை கணிப்பது, பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது குறித்து அவரது அறிவுரைகள் மிகவும் உதவியாக உள்ளன என்றார்.

ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்! சென்னை போராடி தோல்வி!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட... மேலும் பார்க்க

ஷெப்பர்ட் அதிவேக அரைசதம்: சென்னை அணிக்கு 214 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான அட்டத்தில் ஷெப்பர்ட்டின் அதிவேக அரைசதத்தால் பெங்கரூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக... மேலும் பார்க்க

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மாறவிருக்கும் ஷுப்மன் கில்: ரஷித் கான்

இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக ஷுப்மன் கில் மாறப்போவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் ... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ... மேலும் பார்க்க

ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு... மேலும் பார்க்க

சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!

ஐபிஎல் தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும... மேலும் பார்க்க