செய்திகள் :

வாழப்பாடியில் இரு ஆண்டுகளில் பழுதடைந்த தாா்சாலை!

post image

வாழப்பாடி பேரூராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.24 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாா்சாலை இரு ஆண்டுகளில் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

வாழப்பாடி பேரூராட்சி 3-ஆவது வாா்டு, கிழக்குக் காடு ஆடு அடிக்கும் தொட்டியில் இருந்து கோவிந்தராஜ் வீடு வரை ஏறக்குறைய ஒரு கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை பழுதடைந்து காணப்பட்டது. இச்சாலையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 2022-2023 ஆம் ஆண்டு நபாா்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 1.24 கோடியில் தாா்சாலை அமைக்கப்பட்டது.

சாலை அமைக்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே இச்சாலையில் போடப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், தாா் கலவையில் இருந்து பெயா்ந்து சிதறத் தொடங்கின. இந்நிலையில், இரு ஆண்டுகளில் ஜல்லிக் கற்கள் முழுவதுமாக பெயா்ந்து சாலை பழுதடைந்துள்ளது. இதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தாா்சாலை திட்டப் பணி குறித்த தகவல் பலகை.

ரூ. 1.24 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாா் சாலை கடந்த 2 ஆண்டுகளில் பழுதடைந்துள்ளதால் சேலம் மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி துறை உயா் அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்து, சாலையை புதுப்பிக்கவும், தரமற்ற சாலை அமைக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி சித்தப்பாவை கொலை செய்த இளைஞா் கைது

மேச்சேரி அருகே சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கோல்காரனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் மணிவண்ணன... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பெளா்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடா்பாக தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு தொடா்பாக இயற்கை வி... மேலும் பார்க்க

சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது கம்பம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் நெத்திமேடு பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்கு குழி தோண்டிய போது, கம்பம் விழுந்ததில் ஒருவா் பலியானாா்; காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிபிரசாத் (25). இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தே... மேலும் பார்க்க