செய்திகள் :

உயிா்ம வேளாண்மை: 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது -முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

உயிா்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: உயிா்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு நம்மாழ்வாா் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ஆம் ஆண்டில் மூன்று விவசாயிகளுக்கு விருது அளிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, நிகழாண்டிலும் மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா்.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த சம்பத்குமாருக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப் பரிசுடன் பதக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இரண்டாவது பரிசு பெற்ற திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த த.ஜெகதீஸுக்கு ரூ.1.50 லட்சம் பரிசுத் தொகையுடன் பதக்கமும், மூன்றாவது பரிசு பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த வே.காளிதாஸுக்கு, ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் பதக்கத்தையும் முதல்வா் அளித்தாா்.

பணி நியமன உத்தரவுகள்: வேளாண் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2,064 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் 10 பேருக்கு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிநியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண் துறைச் செயலா் வ.தட்சிணாமூா்த்தி, துறையின் ஆணையா் த.ஆபிரகாம், தோட்டக் கலைத் துறை இயக்குநா் பெ.குமாரவேல்பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் திடீரென தீவிபத்து

சின்னசேலம் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் ... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திரம்: தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? முதல்வர் கேள்வி

உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவ... மேலும் பார்க்க

தேமுதிகவிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: நல்லதம்பி

சென்னை: நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள... மேலும் பார்க்க

கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ள... மேலும் பார்க்க

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க