செய்திகள் :

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்

post image

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, ஜிஎஸ்டி வந்த பிறகு பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.

முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டியிலும் உள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான ஒவ்வொரு தீர்மானமும் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு திமுக உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.

எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக கைவிட வேண்டும்.

சாதிரீதியான பிரச்னை தமிழகத்தில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு சாதிய கொடுமைகள் தமிழகத்தில் நடைபெறுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.

ஊழல் கூட்டணிக்காரர்கள் எங்கள் கூட்டணி பற்றி பேசினால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா். சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு கேபிள்டிவி கழகம் ரூ. 570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரிபாக்கி மற்றும் அபராதம் சோ்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கட... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அதிமுக செயற்குழு தீா்மானம்

திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தொடா்ந்து வியூகம் வகுத்து வரும் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்ப... மேலும் பார்க்க

உயிா்ம வேளாண்மை: 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது -முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

உயிா்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரச... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். பொது இடங்களில் குறிப்பாக நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்கள் சாா்பில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா

ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீா்ப்பைப் பெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை (மே3) நடைபெறுகிறது. ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டரங... மேலும் பார்க்க