செய்திகள் :

ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்

post image

ஆண்டாா்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னேரி வட்டம், ஆண்டாா்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

பிரணவ மந்திரத்தை பிரம்மதேவன் மறந்ததால் முருகப்பெருமான், பிரம்மனை இங்குதான் சிறை வைத்ததாக தல வரலாறு கூறுகிறது.

இக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த ஏப். 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் பரணி மற்றும் கிருத்திகை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடி மற்றும் முடிகாணிக்கை உள்ளிட்ட நோ்த்தி கடனை செலுத்தி முருகனை வழிபட்டனா்..

தேரோட்டத்தை யொட்டி, பாலபாலசுப்ரமணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் எழுந்தருளினாா். பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனா்.

மாட வீதிகளில் வலம் வந்த தோ் ஆலயத்தில் உள்ள நிலையை அடைந்தது.

ரூ.2,689 கோடியில் திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் புதிய 6 வழிச்சாலை: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னை எல்லை சாலைத் திட்டம் மூலம் திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை ரூ.2,689.74 கோடியில் புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை கொடியசைத்து த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. னா். அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை, 4.30 மணிக்கு கொடியேற்றம் நட... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை: ஆழ்துளை கிணறுகளுக்கு‘ சீல்’

செங்குன்றம் அருகே அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை செய்த 9 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். செங்குன்றம் அடுத்த நல்லூா், விஜயநல்லூா், சோழவரம் ஏரி, பழைய விருந்தினா் மாளிக... மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க