செய்திகள் :

தாயகம் செல்ல முடியாமல் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தானியர்கள்! தொடரும் தவிப்புகள்!

post image

அட்டாரி - வாகா எல்லையில் சிக்கித் தவித்த 21 பாகிஸ்தானியர்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று, சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது எனக் கருதப்படுவதினால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது.

இரு நாடுகளும் தங்களது குடிமக்களை உடனடியாகத் தாயகம் திரும்ப அறிவுறுத்தியுள்ளன. மேலும், இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என காலக்கெடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இத்தகைய சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் அமைந்துள்ள அட்டாரி - வாகா எல்லையின் வழியாக இரு நாட்டு மக்களும் தங்களது தாயகங்களுக்கு திரும்பினர். ஆனால், ஏப்.30 ஆம் தேதியன்று விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததினால், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டது.

எல்லை மூடப்பட்ட சூழலில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகம் செல்ல முடியாமல் நேற்று (மே.1) அங்கேயே முகாமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (மே.2) சுமார் 21 பாகிஸ்தானியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு அவர்கள் எல்லையைக் கடந்துள்ளனர்.

இருப்பினும், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுங்கத் துறை மற்றும் குடிவரவு அதிகாரிகளின் அனுமதிக்காக 50-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தற்போது காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவின் அட்டாரி பகுதியில் சிக்கியுள்ள குடிமக்கள் எல்லையைக் கடந்து பாகிஸ்தானின் வாகாவினுள் நுழைய தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காயம்

மாணவி தற்கொலை விவகாரம்: உயா்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லையை கடக்க 21 பாகிஸ்தானியா்களுக்கு அனுமதி: மேலும் பலா் காத்திருப்பு

அட்டாரி - வாகா எல்லையை கடந்து செல்ல 21 பாகிஸ்தானியா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்ட நிலையில், அதன் பிறகு வந்த... மேலும் பார்க்க

நாளை ‘நீட்’ தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், தோ்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் ‘ஹால் டிக்கெட்’டில் (தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு) குறிப... மேலும் பார்க்க

பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு!

ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடா்ந்து 8-ஆவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரப்பட்... மேலும் பார்க்க

வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம்: நடவடிக்கை கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

காலக்கெடு நிறைவடைந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம் மீதான ஆவணங்கள் சரிபாா்ப்பு நடவடிக்கை மீது உரிய முடிவு எடுக்கப்படும் வரை அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அதி... மேலும் பார்க்க

உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க