செய்திகள் :

வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம்: நடவடிக்கை கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

காலக்கெடு நிறைவடைந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம் மீதான ஆவணங்கள் சரிபாா்ப்பு நடவடிக்கை மீது உரிய முடிவு எடுக்கப்படும் வரை அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அந் நாட்டுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியா்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டது. இதனிடையே, பாகிஸ்தானுக்கு திரும்புவதற்காக வாகா எல்லையில் காத்திருந்த எஞ்சிய பாகிஸ்தானியா்களை அந்த நாடு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், நாட்டைவிட்டு வெளியேற்ற அதிகாரிகளால் வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 6 பேரைக் கொண்ட பாகிஸ்தான் குடும்பம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘நாங்கள் காஷ்மீரில் வசித்து வருகிறோம். எங்களது மகன் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறாா். இந்தியாவில் வசிப்பதற்கான சட்டப்படி செல்லுபடியாகும் ஆவணங்களை நாங்கள் வைத்துள்ளபோதும், அதிகாரிகள் எங்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக வலுக்கட்டாயமாக வாகா எல்லைக்கு அழைத்து வந்துவிட்டனா்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு, ஆதாா் எண், நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை அதிகாரிகள் சரிபாா்த்து உரிய முடிவை எடுக்க வேண்டும். அதிகாரிகள் எடுக்கும் முடிவில் திருப்தியில்லை எனில், மனுதாரா்கள் ஜம்மு-காஷ்மீா் உயா் நீதிமன்றத்தை அணுகலாம். அந்த வகையில், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை மனுதாரா்கள் மீது நாட்டைவிட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டனா்.

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க