பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு
பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பொதுக் கொள்கையின் அடிப்படையில் தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.