செய்திகள் :

கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?

post image

கோழிக்கோடு: வட கேரளத்தில் கோழிக்கோடு நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர்.

அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு தனி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவில் திடீரென தீ விபத்து ஏற்ட்டது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த நோயாளிகளும் உடனடியாக வெளியே மீட்கப்பட்டனர். எனினும், அந்த கட்டடத்திலிருந்த 5 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்த யூபிஎஸ்ஸில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மின்கசிவு ஏற்பட்டிருக்க கூடுமென சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் இன்று(மே 3) செய்தியாளர்களுடன் பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய மின் துறை சார் நிபுணர்கள் சம்பவ இடத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். முதல்கட்டமாக, தடயவியல் துறையினர் அங்கு சோதனையிட்டு வருகின்றனர். பிற அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து வரவழைக்கப்படும் மருத்துவர்கள் குழு ஒன்று, இங்கே நோயாளிகள் உயிரிழக்க என்ன காரணமென்பதை முழுமையாக விசாரித்து அறிக்கை வெளியிடும். அப்போது, நோயாளிகள் தீ விபத்தால்தான் உயிரிழந்தனரா அல்லது இணை நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளால் அவர்கள் உயிரிழக்க நேரிட்டதா என்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்வர்.”

”ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, மருத்துவமனையிலுள்ள மின் சாதனங்கள் பராமரிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதனால், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு தீ விபத்து நேரிட்டபோது, மருத்துவமனையினுள் 151 நோயாளிகள் தங்கியிருந்தனர். அவர்களில் 37 பேர் இப்போது வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பிறர் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தீ விபத்து நிகழ்ந்த வளாகம் இன்னும் 3 நாள்களுக்குள் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க