செய்திகள் :

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

post image

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில்,

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்தின் முதல் படியாகும். மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவு சமூகப் பாதுகாப்பு, இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடுகளுக்கான தன்னிச்சையான வரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் எல்லை நிர்ணயப் பணி மக்கள்தொகை கணக்கெடுப்பால் கண்டறியப்பட்ட சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்க வேண்டும். விளிம்புநிலை குழுக்களுக்கான விகிதாசார அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். தொகுதிகளின் மறுவரையறை மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளுக்கு உணர்திறன் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மாநில சட்டப்பேரவைகள், இந்திய நாடாளுமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவக் கொள்கையின் அடிப்படையில் அவை விரிவுபடுத்தப்படுத்த வேண்டும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான முடிவு நாட்டின் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாக இருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்புக்காகப் போராடிய லட்சக்கணக்கானவர்கள் தரவுகளை மட்டுமல்ல, கண்ணியத்தையும், அதிகாரமளிப்பையும் எதிர்பார்க்கிறார்கள்.

பொது வளங்களின் முக்கிய பயனாளியாக இருந்த தனியார்த் துறை, சமூக நீதி கட்டாயங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட முடியாது. ஏனெனில் நிறுவனங்கள் சலுகை விகிதங்களில் நிலம், மின்சார மானியங்கள், வரி விலக்குகள், உள்கட்டமைப்பு ஆதரவு மற்றும் வரி செலுத்துவோர் பணத்தால் நிதியளிக்கப்பட்ட பல்வேறு நிதி சலுகைகள் உள்ளிட்ட கணிசமான நன்மைகளைப் பெற்றுள்ளன. அதற்கு ஈடாக, அவை நமது நாட்டின் சமூக அமைப்பைப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமானது.

பிகாரின் ஒத்துழைப்பைப் பிரதமருக்கு உறுதியளிக்கும் வகையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு அடிப்படை யதார்த்தங்களுக்குப் பலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளை உண்மையான சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.

ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரா் கைது

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பய... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா-பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் செல்களாக வாழும் பாகிஸ்தான் மக்களால் ஆபத்து! - பாஜக

ஸ்ரீநகர்: இந்தியர்களை மணந்துகொண்டு இங்கே ஸ்லீப்பர் செல்களாக பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று பாஜக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச்... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆஸி. பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனீஸி! மோடி வாழ்த்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸி வெற்றிவாகை சூடியுள்ளார்.ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பா... மேலும் பார்க்க

கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?

கோழிக்கோடு: வட கேரளத்தில் கோழிக்கோடு நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு தனி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க