செய்திகள் :

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

post image

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

கடந்த 2022 பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் அரசு அமைத்ததாகவும், சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளே மதக்கலவரம் முதன்முறையாக வெடித்தது. 2023 மே 3 முதல் மாநிலத்தில் கலவரம் வெடிக்கத் தொடங்கியது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் செயலிழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்ட மோடி அரசு, மணிப்பூர் முதல்வரை ராஜிநாமா செய்யக் கட்டாயப்படுத்தியது, இறுதியாக பிப்ரவரி 13, 2025 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.

மணிப்பூரின் வேதனையும் துன்பமும் தொடர்கிறது. அரசியல் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. பயனுள்ள சமரச செயல்முறை எதுவும் நடைபெறவில்லை.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மிகுந்த மன அழுத்தத்தில் நிவாரண முகாம்களில் வாழ்கின்றனர்.

மிக முக்கியமாக, பிரதமர் மணிப்பூரைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். அவர் மாநிலத்தைச் சேர்ந்த யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. அவர் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார், ஆனால் பிரச்னைக்குரிய மாநிலத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் சென்றடைய நேரமோ, ஆர்வமோ காட்டவில்லை என்று அவர் கூறினார்.

மணிப்பூரின் நிர்வாகத்தைப் பிரதமர் அவுட்சோர்ஸ் செய்துள்ள உள்துறை அமைச்சர் ஒரு "பெரிய தோல்வி" என்று நிரூபிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

மே 2023 முதல் இம்பாலில் குகி, மொய்தி மக்களுக்கிடையேயான வன்முறையில் 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர். பலர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரா் கைது

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பய... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா-பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் செல்களாக வாழும் பாகிஸ்தான் மக்களால் ஆபத்து! - பாஜக

ஸ்ரீநகர்: இந்தியர்களை மணந்துகொண்டு இங்கே ஸ்லீப்பர் செல்களாக பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று பாஜக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச்... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆஸி. பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனீஸி! மோடி வாழ்த்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸி வெற்றிவாகை சூடியுள்ளார்.ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பா... மேலும் பார்க்க

கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?

கோழிக்கோடு: வட கேரளத்தில் கோழிக்கோடு நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு தனி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க