செய்திகள் :

நாவலைத் தழுவிய படத்தில் ஏஞ்சலினா ஜோலி!

post image

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்களான மலேபிஷண்ட், குங்ஃபூ பாண்டா உள்ளிட்ட பல படங்களின் மூலம் உலகெங்கிலும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவருக்கு இந்தியாவிலும் மிகப் பெரியளவிலான ரசிகர் பட்டாளமுண்டு.

இந்நிலையில், 'ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்‌ஷன்' மற்றும் 'வோர்ல்ட் வார் ஸி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய மார்க் ஃபோர்ஸ்டர் இயக்கத்தில், ஃபிரெட்ரிக் பாக்மான் எழுதிய நாவலைத் தழுவி உருவாகும் புதிய படத்தில் ஏஞ்சலினா ஜோலி நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

’ஆங்ஷியஸ் பீப்பள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், ஸாரா எனும் வங்கி ஊழியர் கிறுஸ்துமஸ் நாளன்று, வங்கிக் கொள்ளையர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கும் மக்களில் ஒருவராக சிக்கிக்கொண்ட பின் அங்கு வெளியாகும் ரகசியங்கள், கலவரங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது திரைப்படமாகும் இந்த நாவலைத் தழுவி, கடந்த 2021-ம் ஆண்டு நெட்பிளிக்ஸின் இணையத் தொடர் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்!

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்! நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்

அனைவரும் இரக்கத்துடன் இருக்க வேண்டும் என்று பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அஜித் கடும் கண்டனம் தெரிவித்திருக்கி... மேலும் பார்க்க

மலையாள இயக்குநர் ஷாஜி என். கருண் காலமானார்!

திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஷாஜி என்.கருண் இன்று(ஏப். 28) காலமானார். அவருக்கு வயது 731970 காலகட்டங்களில் மலையாள திரைத்துறை முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களில் முன்னோட... மேலும் பார்க்க

பாகுபலி மீண்டும் திரைக்கு வருகிறது: அக்டோபரில் மறுவெளியீடு!

கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் சஸ்பென்ஸுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை ஏங்கச் செய்த ‘பாகுபலி’ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் மறுவெளியீடாக திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இ... மேலும் பார்க்க

கைகொடுத்ததா, சுந்தர் சி - வடிவேலு கூட்டணியின் கம்பேக்? - கேங்கர்ஸ் திரை விமர்சனம்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுந்தர் சி, வடிவேலு காம்போவில் ஒரு கலகலப்பான எண்டர்டெய்னருக்கான எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். பழைய காம்போ கம்பேக் கொடுத்து கலக்கியதா?கதைக்களம் என்ற... மேலும் பார்க்க

பல்வேறு பாகங்களாக உருவாகவிருக்கும் மகாபாரதம்: இந்த ஆண்டு பணிகள் தொடங்கும் -ஆமிர் கான்

மகாபாரத காப்பியத்தை கதைக்களமாகக் கொண்டு நடிகர் ஆமிர் கான் ‘மகாபாரத்’ என்ற பெயரில் திரைப்படத்தை படமாக்கப்போவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.அண்மையில் அவர் அளித்துள்ளதொரு பேட்டியில், மேற்கண்ட தகவலை ஆமிர் ... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திர... மேலும் பார்க்க