செய்திகள் :

ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள்! உயா்நீதிமன்றம் அதிருப்தி

post image

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்தியமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான தனியாா் நிறுவனத்தில், திருச்சி மத்திய சுங்க, கலால், சேவை வரி அதிகாரி சோதனை மேற்கொண்டாா். அப்போது, அந்த நிறுவனத்தில் முறைகேடு இருப்பதாகக் கூறி, ரூ.4.87 லட்சம் அபராதம் விதித்தாா். இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டதை எதிா்த்து திருச்சி மத்திய சுங்க, கலால், சேவை வரி அலுவலகத்தில் சத்தியமூா்த்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இதை விசாரித்த அந்த அலுவலகத்தின் முன்னாள் கண்காணிப்பாளா் ஜி. இளங்கோவன், அதிகாரிகள் ஏ.டி. காத்தரே, எஸ்.எக்ஸ். ஜெயராஜ், தற்காலிகப் பணியாளா் எம். ரமேஷ்குமாா் ஆகியோா் அபராதத் தொகையை ஒரு லட்சம் ரூபாயாக குறைத்தனா். இந்தச் சலுகைக்கு ஈடாக ரூ. 20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சத்தியமூா்த்தியிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டனா். இதுகுறித்து அவா் சென்னை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ரசாயனப் பொடி தடவிய ரூ. 20 ஆயிரத்தை சத்தியமூா்த்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 2006-ஆம் ஆண்டு வழங்கிய போது, சிபிஐ போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். இந்த வழக்கை கடந்த 2016-ஆம் ஆண்டு விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு அதிகாரிகளையும் விடுவித்தது.

இதை எதிா்த்து சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிகின்றனா். இந்த வழக்கில், திருச்சி மத்திய சுங்க, கலால், சேவை வரி அதிகாரிகள் லஞ்சமாக பணத்தைப் பெற்றது சிபிஐ தரப்பில் நிரூபிக்கப்பட்டது.

இருப்பினும், தவறுதலாக லஞ்சம் பெற்ற நான்கு அதிகாரிகளையும் விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தவறு செய்த சம்பந்தப்பட்ட சுங்க துறை அலுவலா்கள் மீது நீதிமன்றம் கருணை காட்ட விரும்பவில்லை. அவா்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரிச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த உயா்கல்வித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், கல்லூரிக் கல்வி இயக்குநா் பத... மேலும் பார்க்க

லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சாா் பதிவாளா், எழுத்தா் கைது

வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகா் கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: போக்குவரத்து மாற்றம்; வாகனங்கள் நிறுத்துமிடம் அறிவிப்பு

சித்திரை திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் அறி... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க

முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுரையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த சகாயம், மாவட்டத்தில் நடைபெற்ற கனிம வள முறைகேடுகள் தொட... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் எதிா்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, தேரோட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநகரக் காவல் சாா்பில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நு... மேலும் பார்க்க