செய்திகள் :

மிடில் ஆர்டரில் அதிரடி..! மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

post image

ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் தனது அதிரடியான பேட்டிங் குறித்து பேட்டியளித்துள்ளார்.

இந்தாண்டு தொடர்ச்சியாக நம்.3 இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறங்குகிறார். விராட் கோலி தொடக்க வீரராக மாறியதால் இந்த இடம் படிக்கலிடம் சென்றுள்ளது.

கடந்த சீசன்களில் மெதுவாக விளையாடிய படிக்கல் தற்போது அதிரடியாக விளையாடுகிறார்.

கடந்த 2020இல் 124, 2021இல் 125, 2023இல் 130, 2024இல் 71 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய படிக்கல் தற்போது 2025 சீசனில் 154.36 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.

இது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியதாவது:

மனநிலையில் மாற்றம்

டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விளையாடும்போது மனநிலையில் மாற்றம் வேண்டும். வளர்ந்துகொண்டே இருக்கும் இந்தப் போட்டியில் நேரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்.

நான் விளையாடும் ஷாட்டுகளாக்காக அதிகமாக பயிற்சிசெய்ய வேண்டியிருக்கிறது.

நம்.3இல் தொடர்ச்சியாக களமிறங்குவது மகிழ்ச்சி. நமது பணி என்னவென்று ஒரு தெளிவு இருக்கும்போது அது நமக்கு உதவுகிறது.

அதேவேளையில் நாம் அதைச் சரியாகவும் செய்து முடிக்க வேண்டும். எங்கு இறங்கினாலும் அதைச் சரியாக செய்ய வேண்டும் என்பது முக்கியமானது.

மிடில் ஆர்டரில் அழுத்தம் இல்லை

கடந்த சில ஆண்டுகளில் சரியான முன் தயாரிப்புகள் இல்லாததால் எனது பேட்டிங் பாதிக்கப்பட்டது. அதனால், இந்தாண்டு எனக்குக் கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறேன்.

விராட் கோலி, பிலிப் சால்ட் பவர்பிளேவில் நல்ல தருணத்தை அமைத்துவிடுகிறார்கள். ஆனால், அதை தக்கவைக்க பெரிதாக அழுத்தம் ஏற்படுவதில்லை.

அந்தத் தருணங்களை தக்கவைப்பது முக்கியமானதுதான். இதுவரை நான் அதைச் சரியாக செய்திருக்கிறேன். ஆனால், என்னைச் சுற்றி அனுபவமிக்க வீரர்கள் இருப்பதால் எனக்கு களத்தில் சென்று என்ன வேண்டுமானாலும் விளையாட சுதந்திரம் இருக்கிறது.

இறுதியிலும் அதிரடியாக ஆடும் பவர் ஹிட்டர்ஸ் இருக்கிறார்கள். அதனால் எந்த அழுத்தமும் இல்லை என்றார்.

ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்! சென்னை போராடி தோல்வி!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட... மேலும் பார்க்க

ஷெப்பர்ட் அதிவேக அரைசதம்: சென்னை அணிக்கு 214 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான அட்டத்தில் ஷெப்பர்ட்டின் அதிவேக அரைசதத்தால் பெங்கரூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக... மேலும் பார்க்க

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மாறவிருக்கும் ஷுப்மன் கில்: ரஷித் கான்

இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக ஷுப்மன் கில் மாறப்போவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் ... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ... மேலும் பார்க்க

ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகி... மேலும் பார்க்க