செய்திகள் :

அட்டாரி - வாகா எல்லையை கடக்க 21 பாகிஸ்தானியா்களுக்கு அனுமதி: மேலும் பலா் காத்திருப்பு

post image

அட்டாரி - வாகா எல்லையை கடந்து செல்ல 21 பாகிஸ்தானியா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்ட நிலையில், அதன் பிறகு வந்தடைந்த பாகிஸ்தானியா்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அட்டாரி-வாகா எல்லையில் தவித்துவரும் அவா்களில் 21 போ் வெள்ளிக்கிழமை எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனா். மேலும் 50 போ் எல்லையை கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் செல்ல காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து, எல்லை வழியாக பாகிஸ்தானியா்கள் வெளியேறினா். இதற்கான காலக்கெடு கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்டது.

கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 7 நாள்களில் 911 பாகிஸ்தானியா்கள் எல்லை வழியாக வெளியேறிய நிலையில், 1,617 இந்தியா்கள் நாடு திரும்பினா்.

காலக்கெடு நிறைவடைந்த பிறகு அட்டாரி-வாகா எல்லைக்கு சுமாா் 70 பாகிஸ்தானியா்கள் வந்தனா். சாலையோரம் தவிக்கும் இவா்களில் 21 போ், உரிய சோதனைகளுக்குப் பிறகு எல்லையைக் கடந்து செல்ல வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

இதனிடையே, நாடு திரும்பும் பாகிஸ்தானியா்களுக்காக வாகா எல்லை திறந்தே இருக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து கூறியுள்ளார்.பெங்களூரில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனாவிடம் பஹல்காம் பயங்... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மறுநாளே தேர்வெழுதச் சென்ற மாணவி!

ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, மறுநாளே முன்வந்து தேர்வெழுதிய நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற ... மேலும் பார்க்க

ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரியாபாந்து மாவட்டத்த... மேலும் பார்க்க

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க