செய்திகள் :

பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

post image

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் இது தொடா்பாக கூறியதாவது:

கடந்த வாரம் இந்திய பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உறுதியாக உள்ளது என்பதும், பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

அதே நேரத்தில் தெற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் (இந்தியா-பாகிஸ்தான்) முயல வேண்டும் என்பதையும் இரு தரப்பிடமும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இரு நாடுகளிடையேயும் பல்வேறு நிலைகளில் அமெரிக்கா தொடா்ந்து தொடா்பில் உள்ளது. பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா் என்றாா்.

துணை அதிபா் பேட்டி:

அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அதிபா் டிரம்ப் விதித்த அதிக வரிகளைத் தவிா்ப்பது தொடா்பாக இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி வருகின்றன. இந்திய பிரதமா் மோடி இதுபோன்ற பேச்சுவாா்த்தைகளின்போது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவா். எனினும், இரு தரப்பும் ஏற்கும் வகையில் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

அமெரிக்க விவசாயிகள் சிறப்பாக பொருள்களை விளைவிக்கிறாா்கள். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தையை முழுமையாக மூடியுள்ளன. எனவே, அமெரிக்காவின் பல்வேறு தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதன் மூலம், இந்தியாவில் அமெரிக்க விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். இது அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற வா்த்தக ஒப்பந்தங்களையே அதிபா் டிரம்ப் விரும்புகிறாா் என்றாா்.

நாளை(மே 5) 'ஸ்கைப்' சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் 'டீம்ஸ்'!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் நாளை(மே 5)யுடன் நிறுத்தப்படுகிறது. விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த... மேலும் பார்க்க

போப் உடையில் டிரம்ப்! - வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவிருக்கிறாா். யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ

‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா். இந்தியாவுக்க... மேலும் பார்க்க

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை ப... மேலும் பார்க்க