செய்திகள் :

ரூ.34 லட்சத்தில்..! நவீன வசதிகளுடன் சேலஞ்சர் எலைட், பர்சூட் எலைட்!

post image

இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் சேலஞ்சர் எலைட் மற்றும் பர்சூட் எலைட் ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 1834cc லிக்விட் கூல்ட் வி-டுவின் என்ஜின் இடம்பெற்றுள்ளதால், இதனால், அதிகபட்சமாக126 குதிரைத் திறனையும் 181.4 nm முடுக்குவிசைத் திறனையும் வெளிப்படுத்த முடியும். 22 லிட்டர் அளவுக்கு இதில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம்.

6 ஸ்பீட் கியர் பாக்ஸுடன் 7 அங்குல தொடுத்திரை கூடிய இன்போடெயின்மெண்ட் டிஸ்பிளே, ஆப்பிள் கார்பிளே, மியூசிக் கண்ட்ரோல், டிஜிட்டல் சாவி வசதி, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த பைக்கில் உள்ளன. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 14 முதல் 18 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும்.

இந்தியன் பர்சூட் எலைட் மோட்டார் சைக்கிளானது 1916 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட 20,000 பவர் பிளஸ் பைக்குகளை போன்ற தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. லிமிட்டெட் எடிசன் பயண வாகனமான இந்த பைக்கில் மூன்று வண்ணங்கள் கலந்த மாதிரியாக பிளாக் கேண்டி, பிளாக் ஃபாரஸ்ட் கேண்டி பினிஸிங்கில் கிடைக்கிறது.

மேலும், இதற்கு அழகு சேர்க்கும் விதமாக தங்க நிறத்தில் கைகளால் கோடுகள் வரையப்பட்டுள்ளன. பிரீமியன் பைக் பிளாக் டார்க் ஹார்ஸ் பினிஸிங் செய்யப்பட்டு பவர்பிளஸ் 112 என்ஜின் கவர்கள் போடப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

லிமிடெட் எடிசன் பைக்குகளான இந்த வகையில், தி சேலஞ்சர் எலைட் 39,999 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ. 34.20 லட்சம்), பர்சூட் எலைட் 49,999 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ. 42.75 லட்சம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக சேலஞ்சர் எலைட்டில் 350 பைக்குகளும், பர்சூட் எலைட்டில் 250 பைக்குகளும் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அன்னையர் நாளில்.. இதயம் தொடும் பரிசுப் பொருள்கள்!

ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

மும்பை: ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளுக்காக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 2 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.வங்கிகளில் சைபர் ப... மேலும் பார்க்க

ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

புதுதில்லி : 'நெட்கியர்' நிறுவனம், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தனது சென்னை சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் குழுவை, 100 நபர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது நெட்ஜியர் இந்தியாவ... மேலும் பார்க்க

தி மிஸ்ஸிங் லிங் நிறுவனத்தை கையகப்படுத்திய இன்போசிஸ்!

புதுதில்லி: ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, 'தி மிஸ்ஸிங் லிங்'-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.அதன் துணை நிறுவனமான இன்போசிஸ், ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்து மற்றும் வலுவான உள்நாட்டு தரவுகளால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் இன்று இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிந்தது.ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வ... மேலும் பார்க்க

போகோ முதல் ஐடெல் வரை.. இந்த வார புதிய வெளியீடுகள்!

போகோ இந்தியா வெளியிட்டுள்ள புதிய மொபைல்போன் முதல் டிவோலியின் சாங்க் புக் வரை இந்த வாரம் வெளியான புதிய கேட்ஜெட்கள் பற்றி இங்கு காணலாம்.டேக் ஹியூயர் சன் கிளாஸஸ் (Tag Heuer Sunglasses)சுவிஸை தலைமையிடமாகக... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல் மற்றும் தொடர்ந்து வரும் அந்நிய நிதி வரத்து ஆகியவற்றால் மும்பை பங்குச் சந்தை, குறியீடான சென்செக்ஸ் உயர்ந்தது முட... மேலும் பார்க்க