செய்திகள் :

கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

post image

கேதார்நாத் கோயிலின் நடை இன்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

உத்தரக்கண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்களில் ஒன்றாகவும், சார்தாம் யாத்திரையின் முக்கிய தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றில் கரையில் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களில் கோயில் நடை திறக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான சார் தாம் யாத்திரை இன்று தொடங்கியது. முன்னதாக பாதுகாப்பு காரணக்களுக்காக ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கேதார்நாத் கோயிலை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கிவைத்தார்.

முன்னதாக, தலைமை அர்ச்சகரால் மத சடங்குகள் நடத்தப்பட்டன. கோயிலில் பலவித வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் திறப்பு விழாவின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையில் கேதார்நாத் கோயில் இன்று நடை திறக்கப்பட்டு காலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது

கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.இந்திய கால்பந்தில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது... மேலும் பார்க்க

கௌஃபுடன் மோதும் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, பெலாரஸின் அரினா சபலென்கா வெள்ளிக்கிழமை முன்னேறினாா். அதில் அவா், அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளாா். மகளிா்... மேலும் பார்க்க

துல்கர் சல்மானின் புதிய படத்தில் இணையும் பிரபல இயக்குநர்!

துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குநர் இணைந்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் துல்கர்... மேலும் பார்க்க