செய்திகள் :

இந்தியாவில் 2% மக்கள் மட்டுமே திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்: ஆமீர் கான்

post image

இந்தியாவில் நடைபெறும் வேவ்ஸ் சந்திப்பில் நடிகர் ஆமிர் கான் திரையரங்குகளில் அதிகமாக முதலீட்டை அளிக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.

60 வயதாகும் ஆமிர் கான் சினிமாவில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார். சமீபத்தில் தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தினார்.

முதல்முறையாக உலக ஆடியோ விடியோ என்டர்டெயின்மென்ட் சந்திப்பு (வேவ்ஸ்) மும்பையில் நேற்று தொடங்கியது. இதை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் பங்கேற்று பேசினார். ஆமிர்கான் பேசியதாவது:

திரையரங்குகளில் முதலீடு தேவை

இந்தியாவில் வித்தியாசமான பல திரையரங்குகள் வேண்டும் என நம்புகிறேன். இந்தியாவின் சில மாவட்டங்களில் மிகப்பெரிய இடங்களில் ஒரு திரையரங்கம்கூட இல்லாமல் இருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் பிரச்னைகளை சந்தித்தோமோ அதெல்லாம் கூடுதல் திரைகளுக்காக மட்டுமே. என்னைப் பொறுத்தவரை நாம் அதில்தான் முதலீட்டைச் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் அதிகமான திரைகள் இருக்கும்போதே அது உணரப்படும்.

திரையரங்கம் இல்லையென்றால் மக்களும் படத்தினை பாரக்க மாட்டார்கள்.

குறைவான திரைகள் கொண்ட இந்தியா

இந்தியாவின் மக்கள் தொகையைக் கணக்கிடும்போது மிகவும் குறைவான திரையரங்குகளே இருக்கின்றன.

இந்தியா முழுவதும் வெறும் 10,000 திரைகளை இருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட 3இல் 1 பங்கு மக்கள் தொகையுள்ள அமெரிக்காவில் 40,000 திரைகள் இருக்கின்றன. அவர்கள் நம்மைவிட முன்பாக இருக்கிறார்கள்.

சீனாவில் 90,000 திரைகள் இருக்கின்றன. இந்தியாவில் தற்போது இருக்கும் 10,000 திரைகளிலும் பாதி தென்னிந்தியாவில் இருக்கின்றன. ஹிந்தி படங்களுக்கென்று 5,000 திரைகள் மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவில் 2% மக்கள் மட்டுமே திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்

எவ்வளவு பெரிய பிளாக்பஸ்டர் படமானாலும் இந்தியாவில் குறைந்த அளவு மக்களே படம் பார்க்கிறார்கள்.

திரைப்படங்களை விரும்பி பார்க்கும் இந்திய இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் மட்டுமே படங்களை திரையரங்குகளில் பார்க்கிறார்கள்.

மீதமுள்ள 98 சதவிகித மக்கள் எப்படி படம் பார்ப்பது? கொன்கன் போன்ற இடங்களில் திரையரங்குகளே இல்லையெனில் எப்படி பார்ப்பார்கள்? அது மிகவும் மோசமான சூழ்நிலை. அதனால், திரைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது

கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.இந்திய கால்பந்தில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது... மேலும் பார்க்க

கௌஃபுடன் மோதும் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, பெலாரஸின் அரினா சபலென்கா வெள்ளிக்கிழமை முன்னேறினாா். அதில் அவா், அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளாா். மகளிா்... மேலும் பார்க்க

துல்கர் சல்மானின் புதிய படத்தில் இணையும் பிரபல இயக்குநர்!

துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குநர் இணைந்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் துல்கர்... மேலும் பார்க்க