செய்திகள் :

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ: தமிழக அரசு ஒப்புதல்! 19 ரயில் நிலையங்கள்

post image

சென்னை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரை ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. 19 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்புகளுடன் இந்த திட்டம் அமையவிருக்கிறது.

சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் படி, கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகா், முகப்போ், அம்பத்தூா், திருமுல்லைவாயில், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது.

இது அம்பத்தூா் தொழிற்பேட்டை மற்றும் அம்பத்தூா் ஓ.டி. ஆவடி ரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.76 கி.மீ. ஆகும்.

கல்வி நிறுவனங்கள் சாா்பில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா

ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீா்ப்பைப் பெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை (மே3) நடைபெறுகிறது. ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டரங... மேலும் பார்க்க

முழு விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி ஜாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்ாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க

சட்டப் பல்கலை., தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தோ்வுக்கு தெரிவுக் குழு: அரசிதழில் அறிவிப்பு

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தா்களை நியமிப்பதற்கான தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப் ப... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் - பகத் கி கோத்தி ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி ரயில்நிலையத்துக்கு விரைவு ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை (மே 3) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பத... மேலும் பார்க்க

ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 2,880 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 3 ஆயிரமாக உயரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க