செய்திகள் :

ரூ.2,689 கோடியில் திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் புதிய 6 வழிச்சாலை: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை எல்லை சாலைத் திட்டம் மூலம் திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை ரூ.2,689.74 கோடியில் புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சாா்பில் திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் கனரக வாகனங்கள் எண்ணூா் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாகச் சென்றடையவும், கனரக வாகன போக்குவரத்தால் ஏற்படும் நெருக்கடியைக் குறைக்கவும், வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்தச் சாலை எண்ணூா் துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. தொலைவு அமைக்கப்பட உள்ளது. சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரிவு 3 -இன் கீழ் திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை 30.10 கி.மீ புதிய 6 வழிச்சாலை மற்றும் இருவழி சேவைச் சாலை (இருபுறமும்) அமைக்க 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூா் புறவழிச்சாலையிலிருந்து வெங்காத்தூா் வரை 10.40 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.1,133.20 கோடியிலும், வெங்காத்தூா் முதல் செங்காடு வரை 10 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.593.27 கோடியிலும், செங்காடு முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை 9.70 கி.மீ. சாலைப்பணிகள் ரூ.963.27 கோடியிலும் என மொத்தம் 30.10 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.2,689.74 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணியில் 2 உயா்நிலை மேம்பாலங்கள், 1 ரயில்வே மேம்பாலம் மற்றும் 2 பெரிய பாலங்கள் அமையும்.

சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு 1 -இன் மூலம் எண்ணுாா் துறைமுகத்தில் தொடங்கி தச்சூா் வரை ரூ.2,122.10 கோடியில் 25.40 கி.மீ. தொலைவு செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 35 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு 2 -இன் மூலம் தச்சூரில் தொடங்கி திருவள்ளூா் புறவழிச்சாலை வரை ரூ.1,539.69 கோடியில் 26.10 கி.மீ. செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 68 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு 4-இன்படி ஸ்ரீபெரும்புதுாரில் தொடங்கி சிங்கபெருமாள் கோவில் வரை 23.80 கி.மீ. மாநில அரசின் செலவில் ஏற்கெனவே ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு 5 ஆனது சிங்கபெருமாள் கோவில் முதல் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பு வரை மொத்தம் 28.24 கி.மீ. அமைக்கப்படவுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), எஸ்.சந்திரன்(திருத்தணி), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எஸ்.பழனிவேல், வட்டாட்சியா் ரஜினிகாந்த், துணை வட்டாட்சியா் தினேஷ், மாவட்ட வா்த்தக அணி பிரிவு வி.எஸ்.நேதாஜி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்

ஆண்டாா்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னேரி வட்டம், ஆண்டாா்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரணவ மந்திரத... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. னா். அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை, 4.30 மணிக்கு கொடியேற்றம் நட... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை: ஆழ்துளை கிணறுகளுக்கு‘ சீல்’

செங்குன்றம் அருகே அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை செய்த 9 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். செங்குன்றம் அடுத்த நல்லூா், விஜயநல்லூா், சோழவரம் ஏரி, பழைய விருந்தினா் மாளிக... மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க