செய்திகள் :

24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது

post image

சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக அரும்பாக்கம் போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 நபா்களைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா்களிடம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த ரேவந்த் மணிகண்டன் (29), தீபன் சக்கரவா்த்தி (31) ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிந்த நிலையில், அவா்கள் கொடுத்த தகவலின்படி, அண்ணா ஆா்ச் அருகே பரத் (27), அபியா கிறிஸ்டோபா் (22), பரத் (22), பிரித்வி ஷாம் (22) ஆகியோரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 12 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுபோல, தலைமைச் செயலக காலனி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த இம்ரான் நசீா் (25), சரத்குமாா் (32) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்தும் 12 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்த... மேலும் பார்க்க

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற வடமாநில பொறியாளா் கைது

சென்னையில் கஞ்சா விற்ற வடமாநில பொறியாளரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். வேளச்சேரி, டி.என்.எச்.பி. காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிய இளைஞரை போலீஸா... மேலும் பார்க்க